Published : 01 Apr 2017 09:32 AM
Last Updated : 01 Apr 2017 09:32 AM

பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார்.

சென்னையை அடுத்த அம்பத் தூர் ஒரகடம் அய்யன்குளத்தை சேர்ந்தவர் ஹரி (37). இவர் அம் பத்தூர் தொழிற்பேட்டையில் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வந்தார். கடந்த 5 நாட்களாக காய்ச்ச லால் அவதிப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. காய்ச்சல் குறையாததால் உடல்நிலை மோசமடைந்த அவரை, நேற்று முன்தினம் மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, “உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஹரி என்பவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக் கப்பட்டிருந்தாரா என்பது தெரிய வில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x