

கூடங்குளம் அணுஉலை முதல் யூனிட்டில், சில ஆயத்தப் பணிகள் முடிந்த பிறகு மின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 22-ஆம் தேதி, (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. அன்றைய தினம் 160 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அணுஉலை முதல் யூனிட்டில், சில ஆயத்தப் பணிகள் முடிந்த பிறகு மின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சில ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தற்போது மின்சார உற்பத்தித் தொடங்கிவிட்டது என்று கூறுவது நாடகமே என்று அணுசக்தி எதிர்ப்பாளர்கள் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.