மாணவியின் மருத்துவப் படிப்புக்கு ரூ.1.10 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா வழங்கினார்

மாணவியின் மருத்துவப் படிப்புக்கு ரூ.1.10 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா வழங்கினார்
Updated on
1 min read

மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள ஏழை மாணவி பிரியதர்ஷினிக்கு முதலாண்டு கட்டணமாக ரூ.1.10 லட்சத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில், ''திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. பிளஸ் 2 முடித்த இவருக்கு சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஏழ்மை நிலையில் இருப்பதால், மருத்துவப் படிப்புக்கு நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையை ஏற்று, எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம் மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்பதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி பிரியதர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று நேரில் அழைத்து, முதலாண்டு கல்லூரி, விடுதி, புத்தகக் கட்டணங்கள் என ரூ.1.10 லட்சத்துக்கான வரைவோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்க வாழ்த்துகளை தெரிவித்தார். முதல்வருக்கு பிரியதர்ஷினியும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in