Published : 23 Mar 2014 11:36 AM
Last Updated : 23 Mar 2014 11:36 AM
தமிழகத்தில் முஸ்லிம் களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சியில்தான். தோல்வி பயத்தில் முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங்கி யது தான்தான் என்று பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜவாஹி ருல்லா.
கும்பகோணத்தில் சனிக் கிழமை செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த அவர், காவிரி டெல்டா பகுதியில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக உள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.
முன்னதாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பா ளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கும்ப கோணம் வந்திருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை மயிலாடு துறை தொகுதி பொறுப்பாளர் ராமலிங்கம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லா, வேட்பாளர் ஹைதர்அலி உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் சந்தித்து ஆலோ சனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT