Published : 09 Apr 2017 07:48 AM
Last Updated : 09 Apr 2017 07:48 AM

விசைத்தறி உரிமையாளர்கள் 13-ல் உண்ணாவிரதம்

ஒப்பந்தப்படி கூலி வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மேற்கொண் டுள்ள கோவை, திருப்பூர் விசைத் தறி உரிமையாளர்கள் வரும் 13-ம் தேதி உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கூலி வழங்க வேண்டும் என வலியு றுத்தி கோவை, திருப்பூரில் உள்ள விசைத்தறி உரிமையாளர் கள் கடந்த 2-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். 1.25 விசைத்தறி கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருப் பதுடன், சுமார் 3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், விசைத்தறி உரிமை யாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும்13-ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x