Published : 22 May 2017 09:06 AM
Last Updated : 22 May 2017 09:06 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நேற்று நடந்த காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 12,086 பேர் எழுதினர்.
தமிழக காவல்துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 15, 664 இரண்டாம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்புத் துறை வீரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் தேர்வு நடந்தது.
இந்தத் தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில், வேப்பம்பட்டு ராம் பொறியியல் கல்லூரி, அரண்வாயில்குப்பம் பிரதியுஷா பொறியியல் கல்லூரி, காக்களூர் கலவல கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திரு வள்ளூர் ஆர்.எம். ஜெயின் பள்ளி, நிகேதன் பள்ளி, திருப்பாச்சூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கொழுந்தலூர் வெங்க டேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடந்தது. ஒவ்வொரு தேர்வு மையங் களிலும் ஒரு துணை கண்காணிப் பாளர், 3 ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள், 50 போலீ ஸார் கொண்ட குழுவினர் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வீடியோ கேமரா பதிவு சகிதமாக இந்தத் தேர்வு நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த 14, 624 பேரில், 12,086 பேர் மட்டுமே எழுதினர். தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமி ஐஜி அறிவுசெல்வன், திருவள்ளூர் எஸ்.பி., சிபி சக்ரவர்த்தி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT