Published : 23 Feb 2017 09:48 AM
Last Updated : 23 Feb 2017 09:48 AM
திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த ஆர்.ராஜசெல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகங் களில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பணி யிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து வரு கிறது. எனவே, காலியாக உள்ள இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். பல்கலைக்கழங்களின் வேந்தரான ஆளுநர், உயர் கல்வித் துறை முதன்மை செயலர், பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டு, விசாரணையை மார்ச் 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT