Published : 27 Dec 2013 06:14 PM
Last Updated : 27 Dec 2013 06:14 PM

தமிழக செய்தியாளரை விடுவிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக செய்தியாளரை விடுவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழக செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை சிங்கள படையினர் கைது செய்துள்ளனர். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகயிலும் ஈடுபடாத தமிழக பத்திரிகையாளரை கைது செய்தது கண்டனத்துக்குரிய குற்றமாகும்.

பொதுவாக பத்திரிகையாளர்களை இலங்கை அரசு உள்ளே அனுமதிப்பதில்லை. பத்திரிகையாளர் என்ற காரணத்தால் மகா.தமிழ் பிரபாகரனை கைது செய்துள்ளார்கள்.

இந்தியத் துணைத் தூதர் தேவயானியை அமெரிக்கா கைது செய்தபோது இந்தியா கண்டனம் தெரிவித்ததை போல் சிங்களப்படையினரின் ஜனநாயக விரோத போக்கையும் இந்தியா கண்டிக்க வேண்டும்.

மேலும் சிங்கள அரசின் தமிழர் விரோத போக்கில் தலையிட்டு பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரனை உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x