

மத்திய கூட்டுறவு வங்கிகளில் 2014-15 நிதியாண்டில் ரூ.5 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 2014-15 நிதியாண்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அதில் ரூ.1000 கோடி கடனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.