Published : 10 Jan 2014 07:26 PM
Last Updated : 10 Jan 2014 07:26 PM

தமிழக மீனவர்கள் 40 பேரின் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையிலுள்ள 40 தமிழக மீனவர்களின் காவலை ஜனவரி 24 வரை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்திரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் 28 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி, 22 மீனவர்களை கைது செய்தனர்.

மீனவர்களின் 6 விசைப்படகுகளையும், வலைகளையும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை காங்கேசன் துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், சிறைப்பிடிக்கப்பட்ட 22 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே போல் டிசம்பர் 29 அன்று பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 18 மீனவர்களை சிறைப்பிடித்து, மீனவர்களின் 3 நாட்டுப் படகுகள், மீனவர்களின் வலைகள், பிடித்து வைத்திருந்த வலைகளையும் கைப்பற்றினர். பின்னர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 40 பேரின் காவல் வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தையடுத்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி இரண்டாவது முறையாக ஜனவரி 24 வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார்.

இதனையடுத்து தமிழக மீனவர்கள் 40 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x