அரசு நிலங்களை தனியார் நிலங்களாக முறைகேடாக காட்டி தேசிய நெடுஞ்சாலைத் ​துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி

அரசு நிலங்களை தனியார் நிலங்களாக முறைகேடாக காட்டி தேசிய நெடுஞ்சாலைத் ​துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி
Updated on
1 min read

சென்னை: ஸ்ரீபெரும்​புதூரில் சென்னை - பெங்​களூரு தேசிய நெடுஞ்​சாலையை 6 வழிச்​சாலை​யாக விரிவாக்கும் பணி சில ஆண்​டு​களுக்கு முன்பு நடை​பெற்றது. இதற்​காக தேசிய நெடுஞ்சாலைத் ​துறை ஆணை​யம், அந்​தப் பகு​தி​யில் உள்ள தனி​யார் நிலங்​களை கையகப்​படுத்​தி, அதன் உரிமை​யாளர்​களுக்கு இழப்​பீடு வழங்​கியது.

இந்​நிலை​யில், சிலர் போலி​யான நில ஆவணங்​களை​யும், பட்​டாக்​களை​யும் வழங்​கி, தேசிய நெடுஞ்​சாலைத்​துறை ஆணை​யத்​திடம் ரூ.200 கோடி வரை முறை​கே​டாக பெற்​ற​தாக புகார் எழுந்​தது.

முக்​கிய​மாக பீமன்​தாங்​கல் கிராமத்​தில் அரசுக்​குச் சொந்​த​மான நிலத்தை தங்​களுக்​குச் சொந்​த​மானது என சிலர் பட்டா பெற்​று, அதை வழங்கி பல கோடி ரூபாய் இழப்​பீடு பெற்​றனர்.

அதே​போல், வல்​லம், வடகால் கிராமங்​களில் சிப்​காட் பகு​தி​யில் பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்​காக ஒதுக்​கப்​பட்ட 2.24 லட்​சம் சதுரஅடி இடத்​தை​யும் (ஓஎஸ்​ஆர்) மோசடி செய்து ஒப்​படைத்​து, ரூ.21 கோடி இழப்​பீடு பெற்​றுள்​ளனர். இதற்கு சில அரசு அதி​காரி​கள் உதவிய​தாக​வும் புகார் எழுந்​தது.

இந்த முறை​கேடு​கள் தொடர்​பாக, அரசு உயர் அதி​காரி​கள் உட்பட 11 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, போலீ​ஸார் விசா​ரணை செய்​தனர். இந்த முறை​கேடு​களில் அமலாக்​கத் துறை​யும் தனி​யாக ஒரு வழக்​கைப் பதிவு செய்து விசா​ரித்​தது.

இந்​நிலை​யில், சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு ஆகிய மாவட்​டங்​களில் வழக்​கில் தொடர்​புடைய நபர்​களின் வீடு​கள், அலு​வலகங்​கள் என 15 இடங்​களில் கடந்த 19-ம் தேதி அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

இதில் கணக்​கில் வராத ரூ.1.56 கோடி ரொக்​கம், ரூ.74 லட்​சம் மதிப்​புள்ள தங்க நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும் பல்​வேறு வங்கி கணக்​கு​களில் இருந்த ரூ.8.4 கோடியை அமலாக்​கத்​துறை​யினர் முடக்​கினர்.

இதற்​கிடையே, வழக்​கில், சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​தின் இயக்​குநர் ஆஷிஷ் ஜெயினிடம் (46) நேற்று விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யின் முடி​வில் அவர் கைது செய்​யப்​பட்​ட​தாக அமலாக்​கத் துறை​யினர் தெரி​வித்​தனர். சென்​னையை சேர்ந்த மேலும் சில தொழில​திபர்​களிடம் அமலாக்​கத் துறை​யினர்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

அரசு நிலங்களை தனியார் நிலங்களாக முறைகேடாக காட்டி தேசிய நெடுஞ்சாலைத் ​துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: டிஜிபி அறிக்கை தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in