ராணுவத்தில் சேர போலி சான்றிதழ்: 5 இளைஞர்கள் கைது

ராணுவத்தில் சேர போலி சான்றிதழ்: 5 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் கடந்த 2 நாட்களாக ஆள் சேர்க்கும் முகாம் நடந்தது. உடற்தகுதி, எழுத்துத் தேர்வு முடிவடைந்து, நேற்று சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த சதீஷ் குமார், சக்திவேல், திருப்பதி, மணிகண்டன், மோகன் ஆகிய 5 பேர்களின் ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது.

இதுகுறித்து, ராணுவ அதிகாரி கள் வெலிங்டன் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் தங்கம் தலைமை யிலான போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 5 பேரும் சமர்ப்பித்த வயது, மாற்று சான்றிதழ் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்து குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இளைஞர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in