

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இந்தியா சார்பில் வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரும், இலங்கை சார்பில் அந்நாட்டு மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னாவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். கச்சத்தீவு, மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என்றும், சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் அவர்கள் இன்று மாலை கரை திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுடனான பேச்சு வார்த்தை ஜனவரி 20-ல் நடக்கவுள்ளது.