Published : 18 Jun 2016 08:17 AM
Last Updated : 18 Jun 2016 08:17 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியைக் கண்காணிக்கும் பணியில் புதிதாக 7 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்தார்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் கடற்படையைச் சேர்ந்த 10 பேர், கடலோர காவல் படை யைச் சேர்ந்த 5 பேர் என மொத் தம் 15 பேர் கடந்த 21 வாரங்களாக ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது.
அணிவகுப்பு மரியாதை
இந்த நிகழ்ச்சிக்கு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தின் கமாண்டர் வி.கே.பிஷ்ரோடி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் பங்கேற்றார். பயிற்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
பயிற்சியில் ஒட்டுமொத்தமாக சிறப்பிடம் பெற்றதற்கான கேரள மாநில ஆளுநர் சுழற்கோப்பை மற்றும் கிழக்குக் கடற்படை கட்டுப்பாட்டு அதிகாரியின் சிறந்த பயிற்சி பைலட்டுக்கான சுழற்கோப்பையை உதவி கமாண் டன்ட் அங்குஷ் குமார் சிங் பெற் றார். பயிற்சி முடித்த பைலட்கள் கோவா, கொச்சி, மும்பை, அந்த மான், விசாகப்பட்டினம் மற்றும் டாமனில் பணியாற்ற உள்ளனர்.
நிகழ்ச்சியின் முடிவில், ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்பகுதியைக் கண்காணிக்கும் பணிக்காக 7 புதிய கப்பல்கள் வாங்கப்பட்டுள்ளன. சென்னை யில் இருந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்திய - இலங்கை கடல் பகுதி யில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர் கள் பாதுகாப்புக் கோரி இந்திய கடற்படையைத் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT