Published : 22 Jan 2017 07:03 PM
Last Updated : 22 Jan 2017 07:03 PM
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சென்னை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது.
எனினும், நிரந்தர சட்டத்தை வலியுறுத்தி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் தொடரும் என இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஜனவரி 23-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்'' என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT