Published : 10 Apr 2017 05:14 PM
Last Updated : 10 Apr 2017 05:14 PM

சிலர் செய்த தவறுக்காக ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைப்பது சரியல்ல: விஷால்

சிலர் செய்த தவறுக்காக ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சரியல்ல என்று விஷால் தெரிவித்துள்ளார்.

விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'நெருப்புடா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, விஷால், விவேக் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதில் விஷால் பேசும் போது, "பணப் பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்துள்ளார்கள். சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்தலையே தள்ளிவைப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சரியல்ல என்று தோன்றுகிறது. ஒரு வாக்காளராக இதைச் சொல்கிறேன். மறுபடியும் எப்போது தேர்தல் என தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x