Published : 24 May 2017 12:58 PM
Last Updated : 24 May 2017 12:58 PM

ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி; பாஜகவுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி, பாஜகவுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) கரூரில் ரஜினி குறித்து கூறும்போது, "ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சியடைவேன். பாஜகவுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக உள்ளாட்சித் தேர்தலை பாஜக தனது சொந்த பலத்தில் சந்திக்கும்" என்றார்.

முன்னதாக ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டை பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் ரஜினி பாஜகவுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று பொன். ராதாகிருஷணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x