Published : 17 Jul 2016 10:06 AM
Last Updated : 17 Jul 2016 10:06 AM

வண்டலூர் பூங்காவில் 20 மலைப்பாம்பு குட்டிகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பூங்காவின் பாம்புகள் கூடத்தில் 25 கட்ட உடல் மலைப்பாம்புகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் ஒரு பெண் மலைப்பாம்பு கடந்த ஏப்ரலில் 45 முட்டைகளை இட்டது. 75 நாட்கள் வரை பாம்பு முட்டை களை அடைகாத்தது. பின்னர் கடந்த மாதம் 23-ம் தேதி முட்டை களில் இருந்து 20 குட்டிகள் வெளியில் வந்தன. இவற்றுடன் சேர்த்து, இந்த பூங்காவில் கட்ட உடல் மலைப்பாம்புகளின் எண் ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இந்த வகை பாம்புகளின் தேவை அதிகமாக இருப்பதால், விலங்குகள் பரி மாற்ற முறையில் புதிய விலங்கு களை பெறுவதில் இப்பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த பாம்பு குட்டிகளின் நீளம் 61 முதல் 76 செ.மீ. வரை உள்ளது. குட்டி களின் சராசரி எடை 89.28 கிரா மாக உள்ளது. முட்டைகளை அடை காப்பதோடு மலைப்பாம்புகளின் தாய்மைப் பண்பு முடிவுக்கு வரு கிறது. குட்டிகளை பராமரிக்கும் பண்புகள் கட்ட உடல் மலைப்பாம்புகளிடம் இல்லை.

இப்பாம்புகள் வேகமாக அழியும் நிலையில் உள்ள விஷமற்ற பாம்பினமாகும். இது அதிகபட்சம் 28 அடி நீளம் வரை வளரக்கூடியது. உலகிலேயே நீளமான பாம்பு வகையும் இதுவாகும். முழு வளர்ச்சியடைந்த பாம்பின் எடை சுமார் 113 கிலோ வரை இருக்கும். இவை இந்தியாவில் அசாம் மாநிலம், நிக்கோபார் தீவுகள், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

இந்த வகை பாம்புக் குட்டிகள் ஒரு வாரத்துக்கு உணவு எதுவும் உட்கொள்ளாது. அதன் பிறகு, அவற்றுக்கு ஒரு வாரம் வயதுள்ள எலி குட்டிகள் உணவாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x