Published : 11 Jun 2017 10:12 AM
Last Updated : 11 Jun 2017 10:12 AM
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செய லாளருமான ஜெ.தீபா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த அதிமுக இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு வரும் நிலை மிகவும் வேதனைக்குரியது. திஹார் சிறையிலிருந்து வெளியில் வந்த டி.டி.வி.தினகரன் அதிமுகவை நாங்களே இயக்குவோம் என்கி றார். எம்எல்ஏ-க்கள் சிலரை தன் வசமாக்கியதன் மூலம் கட்சியும், ஆட்சியும் எங்கள் வசமே என்று பேசுகிறார்.
சசிகலா, தினகரன் போன்ற ஆட்கள் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையது அல்ல. இவர்கள் கட்சியை யும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது தொண்டர்களி டையே கோபத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஜெயலலிதாவின் உண் மையான வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிக்காக்கப் படும். அதிமுகவை மீட்டு கட்டிக்காப்பதே எனது லட்சியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT