Published : 13 Feb 2017 07:26 AM
Last Updated : 13 Feb 2017 07:26 AM
பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாண வர்கள் செல்லக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கள், மாவட்டக்கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோ ருக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற் றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக சில பள்ளிகளில் அசாதாரண நிகழ்வுகளால் மாண வர்கள் உயிர் இழக்கும் சூழ்நிலை கள் ஏற்பட்டுள்ளன. இதை முற்றி லும் தவிர்க்க ஆய்வு அதிகாரி களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறி முறைகள் வழங்கப்படுகின்றன.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்த வெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்து மாணவர்கள் அருகில் செல்லாத வாறு கண்காணிக்க வேண்டும்.
* பள்ளிகளில் மின் இணைப்பு கள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா, சுவிட்சுகள் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் மின் இணைப்பை தற் காலிகமாக துண்டித்து வைக்கலாம்.
* மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது.
* கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடை பெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடைவிதிக்கவும், பள்ளங் களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மாணவர்கள் பள்ளி வளாகத் துக்கு உட்புறம் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கை களும் பள்ளித் தலைமை ஆசிரி யரால் மேற்கொள்ளப்பட வேண் டும். மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை ஆய்வு அதிகாரி கள் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT