Published : 07 Apr 2017 08:23 AM
Last Updated : 07 Apr 2017 08:23 AM
உலக புத்தக தினத்தையொட்டி நூலகங்களில் புத்தக கண்காட்சி நடத்துமாறு மாவட்ட நூலகர் களுக்கு பொதுநூலக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக பொது நூலக இயக்குநரும், (கூடுதல் பொறுப்பு), பள்ளிக்கல்வி இயக்கு நருமான எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்கும், மாவட்ட மைய நூலகர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:
இதுதொடர்பாக பொது நூலக இயக்குநரும், (கூடுதல் பொறுப்பு), பள்ளிக்கல்வி இயக்கு நருமான எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்கும், மாவட்ட மைய நூலகர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தக தினம் அனைத்து மாவட்ட நூலகங்களிலும் கொண்டாடப்பட்டு வருகி றது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்ட நூலக ஆணைக்குழுக்களின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களிலும் உலக புத்தக தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
எனவே, ஏப்ரல் 23-ம் தேதி அனைத்து நூலகங் களிலும் உலக புத்தக தினம் கொண்டாடும் வகை யில் பல்வேறு நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யு மாறு மாவட்ட நூலக அலுவலர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
கட்டுரைப் போட்டி
இதில் சிறந்த எழுத்தாளர் கள், பேச்சாளர்கள், சொற் பொழிவாளர்கள், தொழிலதி பர்கள் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். குழந்தைகளுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் கதை சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட வேண் டும். நூலகங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT