

பழநி கோயிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு 20 கிராம் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் வெளி யிட்ட அறிவிப்புகள்:
சென்னை தண்டையார் பேட்டை முருகன் கோயில், அகஸ்தீஸ்வரர் மற்றும் சேனி யம்மன் கோயில்களில் ரூ.59 லட்சத்தில் திருப்பணிகள் மேற் கொள்ளப்படும். பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் தினமும் மாலை சாயரட்சை பூஜை முடிந்தபிறகு 2 ஆயிரம் பக்தர்களுக்கு தொன்னையில் 20 கிராம் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.
திருவண்ணாமலை ஏரி குப்பம் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பிரகார மண்டபம், பைங்கினூர் ஆதிபராசக்தி கோயில் திருமண மண்டப பணிகள், ஆரணி கைலாசநாதர் கோயி லுக்கு பிரகார மண்டப புனர மைப்பு, புதுக்கோட்டை நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில்களுக்கு மராமத்து பணிகள் ஆகியவை ரூ.1.16 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மேல்மலையனூர் அங்காள அம்மன் கோயிலில் ரூ.14 லட்சத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும். திருப்பூர் மேட்டுப்பாளையம் நாட்டராயசாமி, காஞ்சிபுரம் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் களில் முடிகாணிக்கை மண் டபங்கள் ரூ.32.20 லட்சத்தில் கட்டப்படும்.
சேலம் கஞ்சமலை சித்தேஸ் வர சுவாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோயில் களில் பூஜை பொருட்கள் விற் பனை கடைகள், வணிக கட்டிடங் கள் கட்டப்படும். சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை பராமரிப்புக்கு ரூ.14 லட்சத்தில் கொட்டகை அமைக்கப்படும். திருவாரூர் கோணேஸ்வர சுவாமி, வேலூர் ரங்காபுரம் கோதண்டராமர், திருவாலி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்களின் குளங்கள் ரூ.28.20 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்படும்.
பெரும்பாலான கோயில் களில் நந்தவனம் அமைத்து பரா மரிக்கும் நிலை குறைந்துவிட்டது. எனவே, இடவசதியுள்ள 51 கோயில்களில் ரூ.2.55 கோடி யில் புதிய நந்தவனங்கள் அமைக் கப்படும். ஏற்கெனவே உள்ள நந்தவனங்கள் சீரமைக்கப் படும் என்பது உள்ளிட்ட 16 அறிவிப்பு களை அமைச்சர் வெளியிட்டார்.