

இலங்கை தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவை கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப். 15-ம் தேதி தொடங்கியது. மே 29-ம் தேதி வரை 45 நாட்கள் தமிழகத்திலும், மே 31-ம் தேதி வரையில் 47 நாட்கள் புதுவை மாநிலத்திலும் இந்தத் தடை அமலில் இருக்கும். இந்த மீன் பிடித் தடைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல் லாமல் கடற்கரையில் ஆழம் குறைந்த பகுதிகளில் ஓய்வெடுக் கத் தொடங்கியுள்ளன. ஆனால் வழக்கம்போல நாட்டுப்படகு மீன வர்கள் கடலுக்குச் சென்று வரு கின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே பாம்பனில் இருந்து ஞாயிற் றுக்கிழமை மாலை 60-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற னர். திங்கள்கிழமை அதிகாலை நாட்டுப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தலை மன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற் படையினர் நாட்டுப்படகு ஒன்றைக் கைப்பற்றி அதிலிருந்த அபிஷேக், ஆரோக்கியம், சத்தியமிக்சன், ராஜகுணசேகரன், அந்தோனி ஆகிய 5 மீனவர்களை எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட் டனர். மீனவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வவுனியா சிறைச் சாலையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இதுவரை, விசைப்படகு மீன வர்களை குறிவைத்து சிறை பிடித்து வந்த இலங்கை கடற் படையினர், தற்போது, நாட்டுப் படகு மீனவர்களை சிறைபிடித் திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.