Published : 10 Oct 2014 09:54 AM
Last Updated : 10 Oct 2014 09:54 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் 15-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி முதல் வாக்குச் சாவடி மையங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2015-ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் சுருக்கமுறை திருத்தம் ஆகிய பணிகள் வரும் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளன. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை தகுதியடையும் நாளாக கருத்தில்கொண்டு, இந்த ஆண்டில் 18 வயது பூர்த்தியடைவோரின் பெயர் கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் படும். தகுதியுடைய நபர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை, 15-ம் தேதி முதல் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் பெற்று கொள்ள லாம். மேலும், பூர்த்தி செய்யப்பபட்ட விண்ணப்பங்களை வழங்க நவம்பர் மாதம் 10-ம் தேதி கடைசி நாளாகும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் சுருக்கமுறை திருத்தம் செய்வதற்கான படிவங்கள் வரும் 19-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பெற்றுகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்க நவம்பர் 10-ம் கடைசி நாளாகும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்: காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் 9445000413, செங்கல்பட்டு வருவாய் கோட்ட அலுவலர் 9445000414, மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் 9445000415, தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் - 9445000502

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x