Published : 20 Jan 2014 03:16 PM
Last Updated : 20 Jan 2014 03:16 PM

உதகையில் வேட்டை புலி மீண்டும் அட்டகாசம்

உதகையில் மனித வேட்டை புலி இன்று மாடு ஒன்றை அடித்துக் கொன்று மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை அதிகரித்துள்ளது.

உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காப்புக் காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் மூன்று பேரை மனித வேட்டை புலி கொன்றது. இதனால் இப் பகுதியில் உள்ள 25 கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். புலியை வேட்டையாட வனத்துறை முதல் அதிரடிப்படையினர் வரை களத்தில் உள்ளனர்.

கடந்த 15 நாட்களாக புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கப்பாச்சி கிராமத்தில் மாடு ஒன்றை புலி அடித்துக் கொன்று இழுத்துச் செல்வதைப் பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x