Published : 22 Mar 2017 09:27 AM
Last Updated : 22 Mar 2017 09:27 AM

இலவச மின்சாரம் அளித்தது யார்?- திமுக, அதிமுக விவாதம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தது யார் என்பது தொடர்பாக பேரவையில் திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் இடையே விவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

கணேசன் (திமுக) :

முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

நிதியமைச்சர் ஜெயக்குமார்:

இலவச மின்சாரம் எம்ஜிஆர் ஆட்சியில்தான் வழங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு விதையிடப்பட்டது எம்ஜிஆர் காலத்தில்தான்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், திமுக ஆட்சிக் காலத்தில்தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என வலியுறுத்தினர்.

அமைச்சர் செங்கோட்டையன்:

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்கு ரூ.75 ஆக கட்டணம் குறைக்கப்பட்டது. அதன்பின், நடந்த தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் தொடர்பாக பேசப்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமார்:

இலவச மின்சாரம் தொடர்பான அரசாணை உள்ளது. தேவையானால் தருகிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதன்பின், வேறு துறைகள் தொடர்பாக திமுக உறுப்பினர் கணேசன் பேசினார். அவர் பேச்சை முடிக்கும்போது, ‘‘கடந்த 1989-90ல், திமுக ஆட்சியின்போதுதான் இலவச மின்சாரம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது’’ என்றார்.

சின்னாளப்பட்டி சேலை பாதுகாப்பு: திமுக எம்எல்ஏ கோரிக்கையை வலியுறுத்திய அமைச்சர்

சின்னாளப்பட்டி சேலை ரகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்), ‘‘சின்னாளப்பட்டி சேலை ரகங்கள் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் புகழ் பெற்றவை. எனவே, இந்த சேலை ரகங்களைப் பாதுகாக்க திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சின்னாளப்பட்டியில் நவீன சாயப் பட்டறை பிரிவு அமைக்க அரசு முன் வருமா?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘சின்னாளப்பட்டியில் நவீன சாயப்பட்டறை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘சின்னாளப்பட்டி சேலை ரகங்களின் பெருமைகளை எடுத்துக்கூறி அதற்காக நவீன சாயப்பட்டறை அமைக்க வேண் டும் என ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சரு மான ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்தார். இதற்கு ஜவுளித் துறை அமைச்சர் சாதகமான பதிலை கூறியுள்ளார். இந்த கோரிக் கையை நிறைவேற்ற வேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x