Published : 14 Sep 2016 07:45 AM
Last Updated : 14 Sep 2016 07:45 AM

குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட 5 ஒட்டகங்கள் பறிமுதல்

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானிக்காக மாமல்லபுரத்துக்கு கொண்டுவரப்பட்ட 5 ஒட்டகங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானிக்காக கால்நடைகளை பலியிட்டு வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஒட்டகங்களை பலியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை தண் டையார்பேட்டையைச் சேர்ந்த சிலர், ஒரு ஒட்டகம் ரூ.70 ஆயிரம் என்ற விலையில் குழுவாகச் சேர்ந்து 5 ஒட்டகங்களை வாங்கி யுள்ளனர்.

இந்த ஒட்டகங்கள் ஒரு செல்போன் கடை உரிமையாளர் மூலம் வாங்கப்பட்டதாக தெரிகி றது. சென்னையில் காவல் துறையினர் கெடுபிடி அதிகம் இருப்பதால் மாமல்லபுரம் அருகே கடும்பாடி என்ற இடத்தில் அந்த ஒட்டகங்களை கொண்டு வந்து ஒரு தனியார் பண்ணை நிலத்தில் இறக்கினர். அங்கு ஒட்டகங்களை பலியிட்டு அதனை கறியாக மாற்றி, கொண்டு செல்வதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸார் ஒட்டகங்களை பறிமுதல் செய்தனர். அங்கு காவலுக்கு இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பக்ரீத் பண்டிகை முடிந்த பிறகு விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒட்டகங்களை ஒப்படைப்பதா அல்லது ஒட்டகங்களை உரிமை கோரி வருபவர்களிடம் ஒப்ப டைப்பதா என்று போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

5 ஒட்டகங்கள் பலி

புதுப்பட்டினம் அருகே பக்ரீத் பண்டிகைக்காக 5 ஒட்டகங்கள் பலியிடப்பட உள்ளதாக மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சேகருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் கல்பாக்கம் போலீஸார் புதுப்பட்டினம் கால்வாய் கரையோரம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெட்டப்பட்ட ஒட்டகத்தின் எலும் புத் துண்டுகள் கிடந்தன. போலீ ஸாரின் தொடர் விசாரணையில் இப்பகுதியில் 5 ஒட்டகங்கள் வெட் டப்பட்டது தெரிய வந்தது. இச்சம்ப வம் தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் காதர்மொய்தீன், இஸ்மாயில், கரீம், சித்தீக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x