Published : 14 Jan 2014 11:40 AM
Last Updated : 14 Jan 2014 11:40 AM

திமுக கூட்டணியில் தேமுதிக சேருமா?: திருமாவளவன் பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன், திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

கருணாநிதிக்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையின் போர் அத்துமீறல் குறித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இதேபோல் இந்திய அரசும் தீர்மானத்தை முன்மொழிய டெசோ சார்பில் முயற்சி எடுக்க வேண்டும் என்றேன்.

மதவாத சக்திகள் வென்றுவிடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. கூட்டணியில் சேரக்கூடாது என்று விஜயகாந்திடம் கூறியிருந்தேன். பிப்ரவரி 2–ம் தேதி நடக்கவுள்ள கட்சி மாநாட்டில் கருத்து கேட்டு முடிவு எடுப்பதாக அவர் கூறினார். திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்பதை கருணாநிதிதான் முடிவு செய் வார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x