Published : 09 Apr 2017 11:27 AM
Last Updated : 09 Apr 2017 11:27 AM
பொய் வழக்கு பதிவு செய்து காரைக்கால் மேடு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் தொடர் அறப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
படகில் ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக காரைக்கால் மாவட்டம் காரைக் கால் மேட்டைச் சேர்ந்த 6 மீனவர்களை கடந்த 1-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்திய மீனவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன், பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகக் கூறி, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், காரைக்கால் மாவட்டத்தின் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் காரைக்கால் கடற்கரை சலையில் நேற்று முதல் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஏராளமான பெண்கள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்காலில் நேற்று தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT