Published : 24 Aug 2016 07:41 PM
Last Updated : 24 Aug 2016 07:41 PM

தமிழக சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 4 நாட்கள் விடுமுறைக்குப் பின் திங்கள் கிழமை 29-ம் தேதி மீண்டும் நடக்கும்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. புதன்கிழமை சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறை, கதர், கிராமத் தொழில்கள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் வியாழக்கிழமை பேரவை கூட்டம் இல்லை. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பேரவைக் கூட்டம் இல்லை. அதன்பின் 29-ம் தேதி திங்கள் கிழமை மீண்டும் பேரவை கூட்டம் நடக்கிறது.

திங்கள் கிழமை, போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. செப்டம்பர் 2-ம் தேதியுடன் பேரவை கூட்டம் நிறைவு பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x