Published : 27 Oct 2014 09:47 AM
Last Updated : 27 Oct 2014 09:47 AM

கத்தி, பூஜை பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை: 4 பேர் கைது

‘கத்தி’, ‘பூஜை’ உட்பட புதுப்பட திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வேலன் சுப்பிரமணி தலைமையிலான போலீஸார் அண்ணாநகர், ஓட்டேரி, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அண்ணாநகர் திருமங்கலம் சாலையில் ஒரு கடையில் வைத்து புதுப்பட சி.டி.க்கள் தயாரித்ததாக முகமது பைசல்(35), ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் செருப்பு கடையில் வைத்து சி.டி.க்கள் தயாரித்துவந்த முகமது ஜக்ரியா(28) மற்றும் சங்கர்(25), பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் திருட்டு சி.டி தயாரித்துவந்த யூசுப்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் இருந்து ‘கத்தி’, ‘பூஜை’, ‘அரண்மனை’ உட்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான புதுப்பட திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.டி.க்கள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் உட்பட பல எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x