Published : 27 Aug 2016 11:20 AM
Last Updated : 27 Aug 2016 11:20 AM

சென்னை சிபிஎஸ்இ ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பள்ளி பிரிவின் கீழ் 34 பேருக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது. கடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளி பிரிவில் 3 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளி துணை முதல்வர் ஏ.காசிவிஸ்வநாதனும் ஒருவர். இயற்பியல் ஆசிரியரான அவர், தொடர்ந்து இதே பள்ளியில் 36 ஆண்டு காலமாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1985-ம் ஆண்டு முதல் துணை முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x