Published : 18 Jun 2017 05:50 PM
Last Updated : 18 Jun 2017 05:50 PM

முதல்வர் பழனிசாமி மிரட்டப்படக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்: மாஃபா பாண்டியராஜன்

முதல்வர் பழனிசாமி மிரட்டப்படக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறார். மிரட்டக்கூடிய சூழலில் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''முதல்வர் பழனிசாமி மிரட்டப்படக் கூடிய சூழ்நிலையில் உள்ளார். மிரட்டக்கூடிய சூழலில் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனிடமும் எழுந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த மூன்று மாத காலத்திலும் கூட இதுமாதிரி எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக ஒன்றிணையும் காலம் நெருங்கி வருகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x