Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM
நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின்நிலையங்கள் மூலம் மணிக்கு 2,490 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 9 யூனிட்டுகளைக் கொண்ட முதல் அனல்மின் நிலையத்தில் 600 மெகா வாட்டும், 2 யூனிட்டுகளைக் கொண்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 420 மெகாவாட்டும், 7 யூனிட்டுகளைக் கொண்ட 2-ம் அனல் மின் நிலையத்தில் 1,470 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மழைக்காலங்களில் மின் நுகர்வுத் திறன் குறைவாக இருப்பதால், அனல்மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி 600 மெகாவாட் திறன் கொண்ட முதல் அனல் மின் நிலையத்தின் 50 மெகாவாட் திறன் கொண்ட 5-வது யூனிட்டிலும், 100 மெகாவாட் திறன்கொண்ட 7-வது யூனிட்டிலும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 210 மெகாவாட் திறன்கொண்ட முதல் யூனிட்டும் ஆண்டு பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி முதல் அனல்மின் நிலையத்தில் 331 மெகாவாட்டும், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 215 மெகாவாட்டும், 2-ம் அனல் மின் நிலையத்தில் 1,396 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT