Published : 28 Sep 2016 08:54 AM
Last Updated : 28 Sep 2016 08:54 AM

தேமுதிக திருப்பூர் மாவட்டச் செயலாளர் திமுகவில் இணைந்தார்

தேமுதிக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் என்.தினேஷ்குமார் நேற்று திமுகவில் இணைந்தார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக தொழிற் சங்கத் தலைவர் கே.ஆர்.எஸ். மணி, திருப்பூர் ஒன்றியச் செயலாளர் வி.நாச்சிமுத்து, திருப் பூர் மத்திய பகுதிச் செயலாளர் துரை.ரவிச்சந்தி ரன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந் தனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, மதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி, வட்ட நிர்வாகிகள் சிலரும் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x