Published : 21 Jul 2016 02:29 PM
Last Updated : 21 Jul 2016 02:29 PM
அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதற்காக ரூ.183.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் உள்ளாட்சித் தேர்தல் பற்றி குறிப்பிடுகையில், ''உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. மகளிர் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்கள்.
2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக 183.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT