Published : 26 Jul 2016 07:47 AM
Last Updated : 26 Jul 2016 07:47 AM

தமாகா துணைத் தலைவர் பதவியில் இருந்து வேலூர் ஞானசேகரன் நீக்கம்: அதிமுகவில் இன்று சேருகிறார்

தமாகா துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வேலூர் ஞானசேகரன் நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில்,

‘தமாகா மாநில துணைத் தலைவர் வேலூர் ஞானசேகரன், வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாச காந்தி ஆகியோர் அவர்கள் வகித்துவந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 26 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன் அதிமுகவில் இணைந் தார். முன்னாள் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் காங்கிரஸில் இணைந்தனர். மாநில நிர்வாகி கள், மாவட்ட ஒன்றிய தலைவர் கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக, காங்கிரஸ் மற்றும் திமுக வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமாகாவின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான வேலூர் ஞானசேகரனும், அவரது ஆதரவாளரான சீனிவாச காந்தியும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஞானசேகரன் அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரி வித்து முதல்வர் ஜெயலலிதா வுக்கு கடிதம் அனுப்பியதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் மீது இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு

இதனிடையே, முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரு மான ஜெயலலிதாவை ஞான சேகரன் இன்று சந்திக்கிறார். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த தமாகா நிர்வாகி களுடன் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதை ஞான சேகரன் நேற்றிரவு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x