மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரம்: சமாதி எழுப்பி மருத்துவர்கள் நூதன போராட்டம்

மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரம்: சமாதி எழுப்பி மருத்துவர்கள் நூதன போராட்டம்
Updated on
1 min read

மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு கோரி, மருத்துவர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் சமாதி எழுப்பி, நூதன போராட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், மருத் துவ பட்ட மேற்படிப்பில் சேருவ தற்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்ந்து கிடைக்க சட்டப் பாது காப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் சமாதி எழுப்பி, நூதன போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in