Published : 29 Jan 2014 09:30 AM
Last Updated : 29 Jan 2014 09:30 AM

அழகிரி உருவ பொம்மை எரிப்பு: தமிழகம் முழுவதும் போராட்டம்

ஸ்டாலின் குறித்து தகாத வார்த்தைகளைப் பேசியதாக அழகிரி மீது திமுக தலைவர் கருணாநிதி புகார் கூறியதையடுத்து, அழகிரியின் உருவபொம்மைகளை திமுகவினர் பல இடங்களில் எரித்தனர்.

ஸ்டாலின் இன்னும் 3, 4 மாதங்களில் இறந்து விடுவார் என்பதாக, திமுக தலைவர் கருணாநிதியிடம் மு.க.அழகிரி கூறியதாக, திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தென்சென்னை திமுக இளைஞர் அணி நிர்வாகி சிற்றரசு தலைமையிலும் பெரம்பூரில் திருவிக நகர திமுக பகுதி செயலாளர் செ.தமிழ்வேந்தன் தலைமையிலும் திமுகவினர் அழகிரியின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். மேலும் சென்னையின் பல இடங்களில் அழகிரியைக் கண்டித்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

கோவையில் 17 இடங்களில் இதேபோல் கோவை மாவட்டத்தில் 17 இடங்களிலும் குன்னூர், ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் அழகிரியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 15 இடங்களில் அழகிரியின் உருவ பொம்மையை காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணினர் எரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x