Published : 13 Jun 2016 08:35 AM
Last Updated : 13 Jun 2016 08:35 AM
டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலி ருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், நடப்பாண்டு அணை யில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நேற்று அணை திறக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம், காவிரி தமிழ்த் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லணையில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் புக ழேந்தி தலைமையில் கல்லணை பாலம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரி யத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர், இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT