Published : 09 Aug 2016 10:15 AM
Last Updated : 09 Aug 2016 10:15 AM

மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு

மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்காக அமைக்கப் பட்ட நிபுணர் குழு, செம்மொழி அந்தஸ் துக்கான அனைத்து நிபந்தனைகளையும் மேற்கண்ட மொழிகள் பூர்த்தி செய்திருப்ப தாக கருதியுள்ளது. அதன்பேரில் அம் மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதால் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற மனு தாரரின் கருத்தை ஏற்க முடியாது. ஏனென் றால், தமிழ் மொழிக்கு ஏற்கெனவே செம் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுவிட்டது.

மாற்று மொழியின் வளர்ச்சியிலோ அல் லது வீழ்ச்சியிலோ வேறொரு மொழியின் வளர்ச்சி இருக்காது. கலை, இலக்கியத் துக்கான பங்களிப்பு, பயன்பாடு ஆகிய வற்றின் அடிப்படையிலேயே ஒரு மொழிக் கான முக்கியத்துவம் இருக்கும். அந்தக் குழுவின் முடிவு இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது. அதை பார்க்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x