

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
மேற்கு மத்திய வங்கக் கடலில், ஆந்திரக் கடலோரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது. இது தற்போது, மேற்கு வங்கக் கடலில், தெற்கு ஆந்திரா அருகில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற் றும் புதுச்சேரியில் ஓரிரு இடங் களில், மழை அல்லது இடி யுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.