Published : 06 Apr 2017 08:59 AM
Last Updated : 06 Apr 2017 08:59 AM

கதை திருட்டு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் லிங்கா பட தயாரிப்பாளர் ஆஜர்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம், 2014-ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. இப்படத்தின் கதை தனது ‘முல்லைவனம் 999’ படத்தின் கதை என்றும், தனது கதையை திருடி ‘லிங்கா’ என்ற பெயரில் படம் தயாரித்துள்ளதால் ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் இயக்குநர் ரவிரத்தினம் என்பவர் உயர் நீதி மன்றக் கிளையில் மனு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரூ.5 கோடி ரொக் கம், ரூ.5 கோடி வங்கி உத்தர வாதம் அளித்து ‘லிங்கா’ படத்தை வெளியிட தயாரிப்பாளர் ‘ராக் லைன்’ வெங்கடேஷுக்கு உத்தர விட்டது. மேலும், படத்தின் கதை உரிமை தொடர்பாக, உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே நீதிமன்ற உத்தர வுப்படி ‘ராக்லைன்’ வெங்கடேஷ் பணத்தை டெபாசிட் செய்ததால் ‘லிங்கா’ படம் வெளியானது. மதுரை கூடுதல் முன்சீப் நீதி மன்றத்தில் ‘லிங்கா’ கதை தொடர்பாக ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘ராக்லைன்’ வெங்கடேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைத்து, ரவிரத்தினத்தின் வழக்கை முன்சீப் நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மதுரை நீதிமன்றத் தில் நீதிபதி சப்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘ராக்லைன்’ வெங்கடேஷ் நேரில் ஆஜராகி, ‘லிங்கா’ படம் தொடர் பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். முல்லைவனம் இயக்கு நர் ரவிரத்தினம் சார்பில் வழக் கறிஞர் ரமேஷ் வாதிட்டார். பின்னர், விசாரணையை ஏப். 21-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x