Published : 13 Jun 2017 06:18 PM
Last Updated : 13 Jun 2017 06:18 PM

வரும் 23-ம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையமான தாயகத்தில் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x