இலங்கைக்கு தப்ப முயன்ற 2 அகதிகள் கைது

இலங்கைக்கு தப்ப முயன்ற 2 அகதிகள் கைது
Updated on
1 min read

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற 2 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை கடலோர காவல் படையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் மேலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.முகாமில் இருந்து தப்பித்து கள்ளத்தோணியில் மீண்டும் இலங்கைக்குச் செல்வதற்காக வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர் விசாரணையில், இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், இருவரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களுடன் இலங்கையில் இருந்து வந்த படகோட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in