Published : 11 Aug 2016 08:16 AM
Last Updated : 11 Aug 2016 08:16 AM
சுதந்திர தினத்தன்று சென்னை மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர்.அழகுமீனா உத்தரவிட் டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ் மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எஃப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எஃப்எல்-3 உரிமம் கொண்ட ஹோட் டல்களைச் சார்ந்த பார்கள் உள் ளிட்ட அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று மதுபானம் விற்கக்கூடாது. தவறி னால், மதுபான விதிமுறைகளின் படி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT