Published : 11 Feb 2017 08:45 AM
Last Updated : 11 Feb 2017 08:45 AM

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி நேரில் ஆதரவு

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அதிமுக செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி (முன்னாள் மத்திய இணை அமைச்சர் - பாமக) நேற்று, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரி வித்தார். அதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாமகவில் இருந்து வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர் சோ ராமசாமி மூலமாக ஜெய லலிதா முன்னிலையில் அதிமுக வின் சேர்ந்தேன். இந்த 4 ஆண்டுகளில் கட்சியில் நேர்மை யான, எதற்கும் அஞ்சாத மன சாட்சிப்படி நடக்கக்கூடியவர் ஓ.பன்னீர்செல்வம். தமிழக மக்கள் மட்டுமன்றி உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.

நான் பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக இருந்த போது, தற்போதுள்ள தமிழக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் மிக நல்லவர். நேர்மையானவர். நிதானமாக செயல்படக் கூடி யவர். தமிழக மக்களுக்கு நல் லதை செய்வார். நல்லது நடக் கும். சிறைவைக்கப்பட்டுள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் அனை வரும் பணத்துக்காகவும், தற் காலிக பதவிக்காகவும் நம்பி இருக்காமல் தமிழக மக்களின் நலன் காக்க வெளியே வந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x