Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

சட்டம் தொடர்பான 4 பட்டயப் படிப்புகள் விரைவில் அறிமுகம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர கல்வி மையத்தில் மேலும், 4 புதிய முதுகலை பட்டயப் படிப்புகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இங்கு 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்புகள் உள்ளன. இது தவிர, சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு பி.எல். (ஹானர்ஸ்) படிப்பும், 7 வகையான முதுநிலை சட்டப் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்க ழகத்தின் தொலைத்தூர கல்வி மையத்தில் மேலும், 4 புதிய முதுகலை பட்டயப் படிப்புகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கூறியதா வது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைத்தூர கல்வி மையத்தில் வணிக சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், தொழிலாளர்கள் சட்டம் உள்பட மொத்தம் 6 வகையான பட்டயப் படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வருட கால படிப்பு மற்றும் 6 மாத கால சான்றிதழ் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கல்வியல் சட்டம், கடல்சார் சட்டம், காப்பீடு சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் ஆகியவற்றில் 4 புதிய பட்டயப் படிப்புகளை தொடங்கதிட்டமிட்டுள்ளோம். இதற்கான முழு முயற்சியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த படிப்புகள் வேலைவாய்ப்புகளை பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சட்டம் படித்த வர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்டதாரிகளும் இதை படித்து பயன்பெறலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x