

சென்னையைச் சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2013-ல் தனக்கு ஐஏஎஸ் அதிகாரி டி.விவேகானந்தனை தெரியும் என்றும் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறையில் பிஆர்ஓ வேலை வாங்கித் தருவதாகவும் கூறி கே.விஜயராஜன், என்.எல்.ஜமீமா, டி.தினேஷ் உள்ளிட்ட 10 பேரிடம் தலா ரூ. 13 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.
அதை விவேகானந்தன் மற்றும் அவரது மகன் கவின் விவேக்கிடம் கொடுத்துள்ளார். இதற்கு அத்தாட்சியாக கவின் விவேக் ரூ. 1.30 கோடி பெற்றுக்கொண்டதாக ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சொன்னபடி வேலை வாங்கித் தராததால், 10 பேரும் விவேகானந்தன் மற்றும் அவரது மகனி டம் கணபதி பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு கவின் விவேக், 25.12.13 அன்று ஸ்டாம்ப் பேப்பரை மட்டும் வாங்கிக் கொண்டு பணத்தை திருப்பித்தராமல் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரி விவேகானந்தன் மற்றும் அவரது மகன் கவின் விவேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீஸார் தங்கள் இறுதி அறிக்கையை 10-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.விவேகானந்தன் மற்றும் அவரது மகன் கவின் விவேக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.
இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.விவேகானந்தன் மற்றும் அவரது மகன் கவின் விவேக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.
‘‘மனுதாரர்கள் இருவரும் தங்க ளுக்குள்ள அரசியல் மற்றும் ஐஏஎஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுகிறது. சம்பந்தப்பட்ட திருமங்கலம் போலீஸார் 2 வாரத்துக்குள் இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புக ளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். அதுபோல 10வது பெருநகர குற்றவியல் நடுவர் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை 8வது சிபிஐ கூடுதல் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தி்ல் மாற்ற வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.