Published : 27 Jan 2014 05:22 PM
Last Updated : 27 Jan 2014 05:22 PM

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நாளை சிறை நிரப்பு போராட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரி தமிழகம், புதுவை மற்றும் மும்பையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சிறை நிரப்பு போராட்டம் நடத்துவுள்ளதாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் ஜைனுல் ஆபிதீன் கூறும்போது, "இந்தியாவில் மொத்தம் 20% முஸ்லீம்கள் உள்ளார்கள். அவர்களில் 2% அல்லது 3% முஸ்லீம்கள் மட்டுமே உயர்கல்வியை பெறமுடிகிறது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கையில் பெரும்பாலான முஸ்லீம்கள் பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் பின் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்வேயில்லை.

எனவே சமூக நிதியை கருத்தில் கொண்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் 10% இட ஒதுக்கீடும், மாநிலத்தில் 7 % இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி தமிகம், புதுவை, மும்பை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை சிறை நிரப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x